Sunday, April 17, 2016

மகேசுவரமூர்த்தங்கள் 25/25 கங்காதர மூர்த்தி




·         வாமதேவ முகத்தில் இருந்து தோன்றிய வடிவம்
·         பாவங்கள் விலக்கும் மூர்த்தம்
·         பகீரதனின் வேண்டுகோளை ஏற்று விண்ணுலகிலிருந்து பூமிக்கு வந்த இமவானின் மூத்தமகளாகக் கருதப் படும் கங்கையை தன் சடைக் கற்றையில் தரித்துள்ள சிவனின் வடிவம்

வடிவம்

·         யோகபட்டம்
·         ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்த கோலம்
·         விரிசடையில் ஆமை, மீன், முதலை போன்ற உயிரினங்களோடு கங்கையின் திருமுகம் கரங்கள் மான், மழு, சின் முத்திரை, கீழ்க் கை வரத முத்திரை
·         வேறு வடிவம் - கங்காதரமூர்த்தி நான்கு கரங்கள் (சதுர்புஜம்), நின்ற நிலையில் (ஸ்தானகநிலை) மூன்று பங்கங்களுடன் (திரிபங்க நிலையில்) முன் வலது கை அபய கர கீழ்நோக்கி, பின் வலது கை அக்கமாலை, பின் இடது கை சடாமுடியின் சடையை பிடித்தவாறு. இடது புறம் கங்கை மண்டியிட்டு வணங்கிய நிலையில் சிவனின் சடை முடியை நோக்கி வருவது போன்ற வடிவம். கந்தஹாரம் வாஸ்த்ரா யக்ஞோபவீதம், கேயூரம், கங்கணம் அணிந்திருக்கும்.

வேறு பெயர்கள்

·         கங்கைப் புனலுடையான்
·         கங்கையைப் பெற்றவன்
·         கங்கையைக் கறந்தான்
·         புனலுடையான்
·         கங்கையை அங்கே வாழவைத்த கள்வன்

வடிவம் அமையப் பெற்ற கோயில்கள்

·         காஞ்சி கைலாசநாதர் கோயில்
·         மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோயில்
·         புதுக்கோட்டை கோகர்ணேஸ்வரர் கோயில்
·         திருச்சி  உச்சிப் பிள்ளையார் கோயில்


பிற குறிப்புகள்

·         இது யோக மார்கத்தில் இறை வழிப்பாடு செய்வதைக் குறிக்கும். துரியாதீதத்தில் இருந்து அருள் ஆற்றல் பெறுவதை குறிப்பிடுகின்ற வடிவம்.

·         மகாபாரதத்தில் பகீரதனின் கதை விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.


(வேறு குறிப்புகள் இருந்தால் தெரியப்படுத்தவும்)

புகைப்படம் : இணையம்

2 comments:

  1. கர்ணம் தப்பினால் மரணம், மரணத்தை வென்றால் மகேசன் அவனே ஈசன்...
    சிவாயநம





    ReplyDelete